முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடக்கம்!

X
முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தை வேலூரில் இன்று (ஆகஸ்ட் 12) காலை சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார், மாநகராட்சி மேயர் சுஜாதா உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story

