வேலூர் எஸ்.பி தலைமையில் ஆய்வு கூட்டம்!

X
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கடந்த மாதம் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் குறித்தும், நிலுவையிலுள்ள குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் ஆலோசிக்கப்பட்டது.இதில் காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

