ஏற்காடு மலைப்பாதையில் ஆண் பிணம் கிடந்தது.

X
ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது இறந்து கிடந்தவரின் அருகில் இருந்த பையில் விஷ மருந்துகள், பணம், செல்போன், ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை இருந்தது. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தகவல் அறிந்த சேலம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்த் மீனா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நடுத்தெருவில் வசித்து வரும் பத்மநாபன் மகன் சப்தகிரி (வயது 44) என்பதும், இவர் நேற்று முன்தினம் காலை முதல் காணவில்லை என்று அவரது உறவினர்கள் அவரை தேடி வந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சப்தகிரி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து வனப்பகுதியில் வீசி சென்றனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

