மன்னார்குடியில் மேஸ்திரிக்கு கத்தி குத்து

X
மன்னார்குடி மன்னப்பன் தெருவை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 50) இவர் கட்டிட மேஸ்திரி ஆக வேலை பார்த்து வருகிறார்.இவரது மைத்துனர் கூத்தாநல்லூர் அடுத்த மணக்கரையை சேர்ந்தவர் பாலு (வயது 35) கட்டிடத் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் அதேபோல பனையூர் கீழ்சேத்தி பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 40) இவரது மனைவி கோமதி (வயது 34) கோமதி.கட்டிட தொழிலாளி. இந்நிலையில் அறிவழகனின் மைத்துனரான பாலுக்கும், ஞானசேகரன் கோமதிக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.இதனை அடுத்து கோமதி பாலுடன் சேர்ந்த ஊரை விட்டு ஓடி விட்டார்.இது குறித்து கோமதியின் கணவரான ஞானசேகரன் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த ஞானசேகரன் நேற்று மன்னார்குடி பஸ் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது அங்கு மேஸ்திரி அறிவழகனை பார்த்து உள்ளார்.அறிவழகனை கண்டதும் கோபமடைந்த ஞானசேகரன் உனது மைத்துனன் எனது மனைவியை இழுத்துக் கொண்டு ஓடியதால் நான் குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறேன் என்று கூறி அறிவழகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.வாக்குவாதம் முற்றி இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகரன் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அறிவழகனை குத்தி விட்டு ஓடி விட்டார்.இதனால் படுகாயம் அடைந்த அறிவழகனை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அறிவழகன் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து அறிவழகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் தப்பி ஓடிய ஞானசேகரனை தேடி வருகின்றனர்.
Next Story

