கள்ளபிரான்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

X
கள்ளபிரான்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் ,கள்ளபிரான்புரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ராதனசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய கழகச் செயலாளர் படாளம் சத்யசாய் ஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர் பின்னர் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இந்த முகாமில் 15- க்கும் மேற்பட்ட துறைகள் சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். இந்த முகாமில் அரசுத்துறை அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து வந்தனர்.
Next Story

