முன்னாள் முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்

X
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சி வாரியாக இன்று 13.08.2025 படாளம் முதல் அரையப்பாக்கம் வரை மொத்தம் 5 ஊராட்சிகளில் மதுராந்தகம் பகுதிக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு அதிமுக சார்பில் கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது... இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அளிக்கப்படும் வரவேற்பு குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் VG.குமரன், ஒன்றிய துணை செயலாளர், மாவட்ட பிரதிநிதி, கிளை செயலாளர்கள் ஒன்றிய, கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Next Story

