உதகை பழைய கார்டன் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இரவு நேரத்தில் இரை தேடி உலா வரும் சிறுத்தை ..

உதகை பழைய கார்டன் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இரவு நேரத்தில் இரை தேடி உலா வரும் சிறுத்தை ..
X
இரையை தேடி வெகு நேரமாக சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் வெளிய
உதகை பழைய கார்டன் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் இரவு நேரத்தில் இரை தேடி உலா வரும் சிறுத்தை ... இரையை தேடி வெகு நேரமாக சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் அப்பகுதி மக்கள் அச்சம்... நீலகிரி மாவட்டம் உதகையில் அண்மைக்காலமாக உணவு தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இரைத்தேடி இரவு நேரங்களில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான நாய் பூனை போன்ற விலங்குகளை வேட்டையாடி செல்கின்றன. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா அருகே உள்ள பழைய கார்டன் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இரவு நேரத்தில் இரை தேடி உலாவரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. ஹோட்டல் வளாகத்தில் வெகு நேரமாக இறை தேடிய சிறுத்தை ஓட்டல் மேல்மாடி தளத்திற்கு சென்றும் இறையை தேடிய காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே மக்களுக்கு அச்சுறுத்தலாக சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story