தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் 

தஞ்சாவூரில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் 
X
ஆர்ப்பாட்டம்
ஒன்றிய மோடி அரசு அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டலுக்கு அடிபணியக் கூடாது. விவசாயிகள், தொழிலாளர்களுக்கு விரோதமான இந்திய- இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத் துறைகளையும், பொது சேவைகளையும் தனியாரிடம் தாரை வார்க்கக் கூடாது.  வேளாண் விளைபொருளுக்கு உற்பத்திச் செலவுடன் 50 விழுக்காடு உயர்த்தி விலை நிர்ணயம் செய்து சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு புதன்கிழமை காலை நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர் ஆகியோர் தலைமை வகித்தனர்.  ஏஐடியூசி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.சந்திரகுமார், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளர் என்.மோகன்ராஜ், ஏஐசிசிடி மாவட்டத் தலைவர் கே.ராஜன், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலாளர் சின்னப்பன், யூடியூசி மாவட்டச் செயலாளர் ராஜாராமன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் காளியப்பன்,  பி.செந்தில்குமார், சோ.பாஸ்கர்,  பி.கோவிந்தராஜன், முகமது இப்ராஹிம், ஆர்.ராமச்சந்திரன், இரா.அருணாசலம், புண்ணியமூர்த்தி பங்கேற்றனர்.
Next Story