சேலம் அம்மாபேட்டையில் கடன் தொல்லையால் விசைத்தறி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலம் அம்மாபேட்டையில் கடன் தொல்லையால் விசைத்தறி உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
X
போலீசார் விசாரணை
விசசேலம் அம்மாபேட்டை அருகே அதிகாரிபட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 49). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், சொந்தமாக விசைத்தறி கூடம் வைத்து நடத்தி வந்தார். தொழிலை விரிவு படுத்துவதற்காக பொதுத்துறை வங்கி ஒன்றில் கடன் பெற்று உள்ளார். மேலும் வீட்டில் இருந்த நகைகளையும் அடகு வைத்து உள்ளார். ஆனால் தொழிலில் போதுமான வருமானம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்து உள்ளார். கடன் பிரச்சினையால் இவருக்கும், இவருடைய மனைவி தீபாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் விசைத்தறி கூட உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிகாரிப்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story