உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!

X
அரசுத் துறைகளின் சேவைகளை பொதுமக்கள் ஒரே இடத்தில் பெற்று பயனடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாநகரம் - 43, 45 மற்றும் 48 வது வார்டு பொதுமக்களுக்காக 12.08.2025 அன்று காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு முகாமை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் பார்வையிட்டு, மின் இணைப்பு பெயர் மாற்றம் வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு அதற்குரிய ஆவணத்தை வழங்கினார். மேலும் முகாமில் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் 997, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்ந்த மனுக்கள் 267, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்ந்த மனுக்கள் 67, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த மனுக்கள் 60, எரிசக்தி துறை சார்ந்த மனுக்கள் 55 உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த மொத்தம் 1621 மனுக்கள் பெறப்பட்டன. அந்நிகழ்வின் போது சமூக பாதுகாப்புத் திட்டத் தாசில்தார் முருகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளராக ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் பாலசுப்ரமணியன், சரவணன், நவநீதன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், முத்துமாரி, வட்டப் பிரதிநிதிகள் குமார், ஜேசுபாலன், ரஜினி முருகன், ஹைகோர்ட் ராஜா, செந்தில் குமார், சிம்பு சிவா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணியின் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, தொகுதி சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் அஸ்வின், மாநகர சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரன் சிங், மாநகர தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்துப்பாண்டி, பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கணேஷ், பிரதீப், பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் பிரம்ம நாயகம், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சுரேஷ்குமார், சந்தன முனிஸ்வரன், ஜோயல், ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story

