ராணிப்பேட்டையில் மின் நுகர்வோர் குறைதீர்வு நாள் கூட்டம்

X
ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-வது செவ்வாய்க்கிழமை மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படும். அதன்படி இந்த மாதத்துக் கான கூட்டம் 19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை ராணிப்பேட்டை கோட்ட அலுவலகத்தில் வேலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடக்க உள்ளது. கூட்டத்தில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்தத் தகவலை ராணிப்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
Next Story

