ஸ்ரீ மயூராம்பிகையாக ஓங்காளியம்மன்

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுவதும்அனைத்து வெள்ளிக் கிழமைகளிலும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகிறது. ஆடி மாதம் 5ம் வெள்ளிக்கிழமையான இன்று ஸ்ரீ மயூராம்பிகையாகஓங்காளியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் மற்றும் மூலவருக்கு 5ம் வெள்ளியை ஒட்டி சுமார் மயில் தோகைகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. மயில்தோகை விரித்து ஆடுவது போன்ற நிலையில்அம்மன் மயில் மீது அமர்ந்திருப்பது போன்ற அலங்காரத்தில் காட்சியளித்த ஓங்காளி அம்மனை பெண்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வழிபட்டனர். உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டது. மூலவரை தரிசிக்கும் பக்தர்களுக்கு தாலி கயிறு,மஞ்சள் குங்குமம் மற்றும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. அம்மனை வழிபட நீண்ட வரிசையில் நின்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

