சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்த மாவட்ட ஆட்சியர்.

X
NAMAKKAL KING 24X7 B |15 Aug 2025 6:13 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.விமலா ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டார்கள். மேலும், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்தம் வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார்.பின்னர், அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக சுமார் 100 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார். சுதந்திர தினவிழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.96,000/- மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், கூட்டுறவுத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.10,94,500/- மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்கு, கால்நடை பராமரிப்பு கடனுதவி தோட்டக்கலைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1,25,000/- மதிப்பீட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் கீழ் குறைந்த விலையில் வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்க மானியம், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3,26,624/- மதிப்பீட்டில் சோலார் பம்ப்செட், சோலார் டிரையர் சூரிய கூடார உலர்த்தி வேளாண்மைத்துறையின் சார்பில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.6,000/- மதிப்பீட்டில் மக்காச்சோளம் உற்பத்தி அதிகரித்தல் செயல்விளக்கத்திடல் தொகுப்பு, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13,380/- மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.6,500/- மதிப்பீட்டில் இலவச சலவைப் பெட்டி, சமூக நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.50,000/- மதிப்பீட்டில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நலத்திட்ட உதவி, தொழிலாளர் நல வாரியம் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.14,400/- மதிப்பீட்டில் ஓய்வூதிய ஆணை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.18,00,000/- மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.35.32 இலட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய 35 காவல்துறை அலுவலர்கள், 253 அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 288 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் தமிழ்நாடு அரசின் திட்டங்களை சமூக ஊடகங்கள் (Twitter, Facebook, Instagram, Youtube) வாயிலாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பாக பணியாற்றிய நாமக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக பணியாளர்களுக்கு கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து, திருச்செங்கோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஸ்ரீசைதன்யா டெக்னோ பள்ளி, தொ.ஜேடர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். லட்சுமி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பாச்சல் அரசு மேல்நிலைப்பள்ளி, எருமப்பட்டி ஸ்ரீவிவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 6 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 640 மாணவ, மாணவிகள் பங்கு பெற்ற கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இக்கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ்., ., மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், திருச்செங்கோடு உதவி ஆட்சியர் அங்கித்குமார் ஜெயின், , மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் க.பா.அருளரசு, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வே.சாந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், உதவி ஆணையர் (கலால்) என்.எஸ்.ராஜேஸ்குமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் தி.காயத்திரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரகுமார், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.சாந்தா அருள்மொழி, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.அ.ராஜ்மோகன், துறைசார்ந்த அலுவலர்கள், அரசுத்துறை பணியாளர்கள், காவல்துறையினர், மாணவ, மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
