அரியலூர் கல்லூரி முன்பு போராடியே இந்திய மாணவர் சங்க தலைவர்களை தாக்கிய அரியலூர் காவல்துறைக்கு மார்க்சிஸ கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

அரியலூர் கல்லூரி முன்பு போராடியே இந்திய மாணவர் சங்க தலைவர்களை தாக்கிய அரியலூர் காவல்துறைக்கு மார்க்சிஸ கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.
X
அரியலூர் கல்லூரி முன்பு போராடியே இந்திய மாணவர் சங்க தலைவர்களை தாக்கிய அரியலூர் காவல்துறைக்கு மார்க்சஸ் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
அரியலூர்,15- அரியலூரில் பாரம்பரியமான  அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்லூரியில் பயின்று வருகின்றனர்.  எந்த அடிப்படை வசதியும் இல்லாத கலைக்கல்லூரி ஆகவே மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறை வசதி இல்லை. குடிநீர் வசதியும் இல்லை. வகுப்பறையை முறையாக பராமரிப்பதும் இல்லை. ஓய்வு நேரங்களில் ஓய்வு எடுப்பதற்கு சரியான ஒய்வுஅறையும் இல்லை. அதே போன்று கல்லூரி வளாக முழுவதும் செடி கொடிகள் நிறைந்து விஷ சந்துக்கள் நடமாட்டம் உள்ளது. ஆகவே இதனால் மாணவ மாணவிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆகவே மேற்கண்ட ஒட்டுமொத்த அடிப்படை வசதியும் செய்வதற்கு கல்லூரி நிர்வாகம் பல ஆண்டுகளாக.      எந்த முயற்சியும் எடுக்கவில்லை இதனால் அவதிப்படுகின்ற மாணவ, மாணவிகள் நலன் கருதி தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக 14. 8 .2025 காலை 11 மணி அளவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கூறி ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு அடிப்படை வசதி செய்து தரக்கோரி நியாயமான முறையில் அமைதியான வழியில் போராட்டம் நடத்தினார்கள் ஆனால் கோரிக்கைகளை செய்து கொடுப்பதற்கு பதிலாக போராட்டம் நடத்தக்கூடிய மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக
* கல்லூரி நிர்வாகமும் காவல்துறையும் சேர்ந்து அத்துமீறி போராட்டம் நடத்திய மாணவர் சங்க தலைவர்கள் மீது அடிதடி தாக்குதல் நடத்தியது ஒருமையில் அதாவது வாடி போடி என்று மாணவிகளை பேசியது, மாணவர் சங்கத் தலைவரை கீழே தள்ளிவிட்டு அடித்தது போன்ற அராஜகத்தில் ஈடுபட்ட அரியலூர் அரசு கல்லூரி முதல்வர் மீதும் மற்றும் காவல் துறை அதிகாரிகள் குறிப்பாக அரியலூர் டிஎஸ்பி ரகுபதி மீது துறை வாரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அதோடு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு.     மாவட்ட ஆட்சி நிர்வாகம் தமிழக அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், அடிப்படை உரிமைகளை செய்து கொடுக்க வேண்டும் என்று நியாயமான முறையில் போராட்டங்கள் நடத்திய மாணவர் சங்க நிர்வாகிகள் மீது இதுபோன்று காட்டுமிராண்டித்தனமாக பேசுவது தாக்குவது போன்ற செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்டக்குழு சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் ஆகவே தமிழக அரசாங்கம் அரியலூர் அரசு கலைக் கல்லூரிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அறிக்கையின் வாயிலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Next Story