சேலத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
X
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் நரசோதிப்பட்டி பெருமாள் கோவில் மலை அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அம்பிகா. இவர்களது மகள் அனுஸ்ரீ (வயது18). இவர், பிளஸ்-2 முடித்துவிட்டு சேலத்தில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்க சேர்ந்துள்ளார். மாணவி வருகிற 1-ந் தேதி முதல் கல்லூரிக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி அனுஸ்ரீ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவிக்கும், அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இருப்பினும், வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story