சூளகிரி அருகேவட மாநில வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.

X
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகிபுல் அலி (23) இவர் சூளகிரி அருகேயுள்ள குண்டுகுறுக்கி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடும்ப பிரச்சினயால் நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த விடுதி அறையில் 3-வது தளத்தில் இருந்து குதித்தார். இதில் படு காயம் அடைந்த அவரை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ராகிபுல் அலியின் உடலை மீட்டு சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

