ஆடி கிருத்திகை வழிபாடு

X
திருக்கோவிலுார் ஆஸ்பிட்டல் ரோடு பாலசுப்பிரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகம், தங்க கவச அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர். சுவாமிக்கு சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

