சேலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில்,

X
சேலம் கிச்சிப்பாளையம் குறிஞ்சிநகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் 2-வது மாடியில் வசித்து வருபவர் மாரியப்பன் (வயது 31), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்த நிலையில் மாரியப்பன் நேற்று முன்தினம் இரவு தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினர். அப்போது அவர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் நள்ளிரவில் அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் தனது இடது கையை பிளேடால் அறுத்துக்கொண்டார். மேலும் அவர் திடீரென மாடியில் இருந்து கீழே குதித்த போது அங்கிருந்த கடையின் மீது விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிச்சிப்பாளையம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். இதையடுத்து மாரியப்பன் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

