அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்

அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்
X
அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதிக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதை முன்னிட்டு மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் ஊராட்சி வாரியாக இன்று 17.08.2025 கிளை கழக நிர்வாகிகள், பூத் கமிட்டி நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு புரட்சித் தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் வரவேற்பு குறித்து ஆலோசனை வழங்கினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுராந்தகம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் VG.குமரன், ஒன்றிய அவைத் தலைவர், மாவட்ட பிரதிநிதி, கிளை செயலாளர்கள் ஒன்றிய, கழக நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்..
Next Story