தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

X
மதுராந்தகம் முதல் மாமண்டூர் மாமண்டூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள். சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறை என தொடர் மூன்று நாள் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பொதுமக்கள் கார்கள் அரசு பேருந்துகள் தனியார் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் சென்னை நோக்கி செல்வதால் செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம், படாளம், புதுக்கத்துறை ஆகிய பகுதிகளில் மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் மதுராந்தகத்திலிருந்து மாமண்டூர் வரை உள்ள 20 கிலோமீட்டர் தூரம் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் சாரல் மழையில் ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது இதனால் இந்த தேசிய நெடுஞ்சாலையை கடப்பதற்கு வாகன ஓட்டிகள் 2 மணி முதல் 3 மணி வரை காத்துக்கிடந்து செல்ல வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
Next Story

