சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேர் கைது

X
திருவாரூர் மாவட்டம் மணவாளநல்லூா் பகுதியில் எரவாஞ்சேரி போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டபோது, அட்டை பெட்டிகளில் 180 மிலி அளவுள்ள 158 மதுபாட்டில்கள் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மதுபாட்டில்கள் கடத்தி விற்பனையில் ஈடுபட்ட கண்டிரமாணிக்கம், குச்சிப்பாளையம் சுப்பிரமணியன் மகன் ரமேஷ்குமாா் (49), தட்சிணாமூா்த்தி மகன் தெய்வசிகாமணி (49), மணவாளநல்லூா் மகாலிங்கம் மகன் ராமன் (40), கலியமூா்த்தி மகன் ராமகிருஷ்ணன் (39) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story

