உத்தனப்பள்ளி:அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் தியானதுர்க்கம் வி. ஏ. ஒ. செந்தில் மற்றும் அதிகாரிகள் உத்தனப்பள்ளி அருகே அகரம் முருகன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்ட போது அதில் இரண்டு யூனிட் மணல் அனுமதி இன்றி எடுத்து வரப்பட்டது தெரியவந்தது. இது குறித்து அதிகாரி செந்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story

