தொழிலாளி முகத்தில் திராவகம்  வீசிய பெண் - பரபரப்பு 

தொழிலாளி முகத்தில் திராவகம்  வீசிய பெண் - பரபரப்பு 
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம்  கீரிப்பாறையை அடுத்துள்ள தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (43). அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மனைவி மேரி என்பவருக்கும் ஒரு இடம் விற்பனை செய்தது விஷயமாக முன் பகை இருந்துள்ளது. இந்நிலையில் ஜெகன் இன்று மேரி வீட்டிற்க்கு சென்று அந்த கொடுக்கல் வாங்கல் விஷயம் குறித்து பேசும் போது ஏற்பட்ட தகராறில், மேரி தகாத வார்த்தையால் பேசி, கையில் சில்வர் கப்பில் வைத்திருந்த ஏதோ திரவத்தை ஜெகன் முகத்தில் வீசினார். அவர் முகம் அதி பயங்கரமாக எரிச்சல் உன்டானது. உடனே அவர் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் மேரி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story