ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை

X
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ரங்கப்பனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது. முகாமிற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மலர்கொடி தலைமை தாங்கினார். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கண்களில் ஏற்பட்டுள்ள கிட்ட பார்வை, துாரப்பார்வை, நீர் வடிதல், சதை வளர்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
Next Story

