பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!

பெருமாள் கோயிலில் நெய்தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
X
ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு 1008 நெய்தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் இருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 20) சிறப்பு பூஜை நடந்தது. ஸ்ரீ சக்தி அம்மா அவர்களின் ஆசியுடன் 1008 பாரம்பரிய நெய் தீபங்கள் ஏற்றி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சீனிவாச பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்களுக்கு கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story