வெள்ள எச்சரிக்கை அபாயம் கரையோர கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது

வெள்ள எச்சரிக்கை அபாயம் கரையோர கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது
X
வெள்ள எச்சரிக்கை அபாயம் கரையோர கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
அரியலூர், ஆக.20- வெள்ள எச்சரிக்கை அபாயம் எதிரொலியாக, கரையோர கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துவைக்கவோ கூடாது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மேட்டூர் அணைக்கு கிருஷ்ணராஜசாகர் அணை மற்றும் கபினி அணையிலிருந்து முறையே வினாடிக்கு 70,000 கன அடி மற்றும் 25,000 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது.மேலும், திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகளவு இருக்கும். எனவே அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் உள்ள கிராம மக்கள் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணிகள், துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் எனவும், கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், ஆறு மற்றும் கால்வாய்களில் அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகளை விளையாட செல்லவிடாமல் பெற்றோர்கள் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களின் கால்நடைகளை ஆற்றின் நடுவே அமைந்துள்ள திட்டுகளில் மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், நீர்நிலைகள் வழியாக அழைத்துச்செல்வதை தவிர்க்க வேண்டும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Next Story