சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து  தற்கொலை

சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து  தற்கொலை
X
பெண்ணின் தந்தை புகார்
குமரி மாவட்டம் பைங்குளம் பகுதி காட்டு விளையை சேர்ந்தவர் அனில் (30).  இவர் மத்திய ரிசர்வ் படையில் காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் வேங்கோடு பகுதியை சேர்ந்த சிந்து (25) என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த தம்பதிகளுக்கு நேற்று 19ஆம் தேதி இரண்டாவது திருமண நாள் ஆகும். இதற்காக அனில் காஷ்மீரில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வருவதாக தெரிவித்தார். இந்த நிலையில் முந்தின நாளில்  கணவனும் மனைவியும் போனில் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும்  தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.        அதனால் மனமுடைந்த சிந்து நேற்று முன்தினம் இரவு திடீரென விஷம் குடித்து ஆபத்தான நிலையில் காணப்பட்டார்.  உடனடியாக அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிட்சை பலனின்றி சிந்து உயிரிழந்தார். உடலை  குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். நேற்று புதன்கிழமை  குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.         இதற்கிடையில் சிந்துவின் தந்தை சுரேஷ்குமார் என்பவர் புதுக்கடை போலீசில் அளித்த புகாரில் சிந்துவின் மாமியார் கலா (51), அனிலின் அண்ணன் அனு(30) ஆகியோர் தனது மகளை கொடுமை படுத்தியதால் மனமுடைந்து சிந்து தற்கொலை செய்ததாக புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story