தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை

X
குமரி மாவட்டம் மேக்காமண்டபம் கைலாசவிளை பகுதியை சேர்ந்தவர் மணி (60). இவருக்கு மனைவி ஒரு மகள் உண்டு. மணி குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்தார். மேக்காமண்டபம் சந்தை பகுதியில் உள்ள கடை திண்ணைகளில் தான் இரவு தூங்குவது வழக்கம். அவ்வப்போது சந்தையில் கூலி வேலைக்கு சென்று அந்த பணத்தில் பிழைப்பு நடத்தினார். நேற்று இரவு மீன் சந்தையில் படுத்து இருந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மேக்காமண்டபம் சந்தை அருகில் உள்ள ஆலமரத்தின் கீழ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மணி இறந்து கிடந்தார். இது குறித்து சந்தைக்கு வந்த வியாபாரிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக கொற்றிக் கோடு போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் தான் நேற்று இரவு மணியிடம் தகராறு செய்ததை சிலர் பார்த்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் விசாரணை நடந்து வருகிறது.
Next Story

