தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம்
X
கூட்டம்
உளுந்துார்பேட்டையில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. உளுந்துார்பேட்டையில் வட்டார அளவில் 110 தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி தலைமையில் நடந்தது. மாநில அடைவுத்திறன் தேர்வு அறிக்கை அடிப்படையில் மாணவர்களின் அடைவு திறனை முன்னேற்றுவது குறித்து அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சக்திவேல், ஆசிரியர் பயிற்றுநர்கள் அரசு, காசிலிங்கம், ரம்யா, சரிதா, ஜெயலட்சுமி, ஆறுமுகம் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story