பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் பிறந்த நாள்

X
பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின்கீழ், நாகர்கோவில், வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள ஜீவா நினைவு மண்டபத்திலுள்ள, திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இன்று (21.08.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

