சோழவந்தான் அருகே இளம் பெண் மாயம்

X
மதுரை மாவட்டம் சோழவந்தான் பள்ளி வாசல் தெருவில் வசிக்கும் முகம்மது சுலைமானின் மகள் ரெஜினா பேகம் (19) என்பவர் பிளஸ்டூ படித்து விட்டு கடந்த 2 வருடங்களாக வீட்டில் இருந்து வருகிறார். இவர் கடந்த 18ம்தேதி மதியம் 12 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஆக.20) இவரது தாயார் நூர்ஜஹான் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

