சாமிதோப்பு அய்யா வைகுண்டர் பதியில் கொடியேற்றம்

X
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமை பகுதியில் ஆவணித் திருவிழா இன்று 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு, பள்ளியறை திறத்து அய்யாவுக்கு பணி விடையை தொடர்ந்து கொடிப்பட்டம் திருக்கொடியேற்றம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் 11 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழாவில் எட்டாம் நாள் கலிவேட்டையும்,11ஆம் நாள் தேரோட்டமும் மிக விமர்சையாக நடைபெறும். தினமும் சிறப்பு பணிவிடை, உச்சிப்படிப்பு,உகப்படிப்பு,அய்யா பவனி வருதல் நடைப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

