தக்கலை : தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது

கழுத்தறுத்து கொலை
குமரி மாவட்டம் தக்கலை அருகே மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் மணி (60). தனியாக வசித்து  வந்த இவர் கடந்த 20ம் தேதி அதிகாலை மேக்கா மண்டபம் சந்தை பகுதியில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.   கொற்றிகோடு போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தினர்.  இந்த சம்பவம் தொடர்பாக கொற்றிக்கோடு  போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று அதே பகுதி மேசாக் (32) என்பவரை மருந்துகோட்டை பகுதியில் வைத்து கைது செய்தனர். மேசாக் மணியை கொலை செய்ததாக போலீசிடம் ஒப்புதல் அளித்தார்.
Next Story