வீட்டை உடைத்து நகை திருட்டு

X
நெல்லை மாநகர கேடிசி நகர் டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வீட்டை பூட்டி விட்டு உறவினர் துக்க வீட்டிற்கு நாகர்கோவில் சென்று நேற்று திரும்பினார்.அப்போது அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஏழு கிராம் தங்க நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுக்குறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

