மசினகுடியில் வயது மூப்பு புலி

X
நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் வயது மூப்பு காரணமாக உடல் மெலிந்து, வேட்டையாடும் திறனை இழந்த புலி ஒன்று வனத்துறையின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தது சமீப நாட்களில் அந்தப் புலி இயல்பான இரைகளைப் பிடிக்க முடியாமல், கிராமப்புறங்களில் கிடைக்கும் இறைச்சிக் கழிவுகளை உண்டு வாழும் நிலை ஏற்பட்டு இருந்தாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு தீவிரம்: புலியின் நடத்தை மற்றும் இயக்கம் குறித்து தெளிவாக அறிந்து கொள்ள வனத்துறை கண்காணிப்பு கேமரா மற்றும் ட்ரோன் உபகரணங்களை பல இடங்களில் அமைத்துள்ளது. 24 மணி நேரமும் வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு, புலி மனிதர்கள் இருக்கும் பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் முயற்சியில் இருந்தனர் வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “புலியின் வயது அதிகம், அதன் உடல் நிலை பலவீனமடைந்துள்ளது. இதனால் எளிதில் கிடைக்கும் இறைச்சிக் கழிவுகளை உண்டு வாழும் நிலையில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மை; எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம்” என்று தெரிவித்த நிலையில்இன்று 24.08.2025 ம் தேதி மாலை இறந்து கிடந்தது கண்டுப் பிடிக்கப்பட்டது.இறந்த புலியின் பிரேதப்பரிசோதனை NTCA வழிக்காட்டுதலின் படி மேற்க்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படடு வருகிறது.
Next Story

