தஞ்சாவூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்

தஞ்சாவூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்
X
பலி
தஞ்சாவூர் மாவட்டம், சோழகம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து இவரது மகன் ஜனா (7), மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் தேவா (11), இவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை முடிவெட்டுவதற்காக சலூனுக்கு சென்றனர். முதலில், சலுானில் ஜனா முடிவெட்டிக் கொண்டார். பிறகு தேவா முடி வெட்டிக்கொண்டு இருந்த போது, ஜனா மாரனேரி பகுதியில் உள்ள கல்லணைக் கால்வாய் ஆற்றில் குளிக்க முயன்ற போது, நீரில் அடித்து செல்லப்பட்டு, கீழ்குமுளியில் சிக்கினார். அங்கு குளித்துக் கொண்டு இருந்தவர்கள், ஜனாவை மீட்டு,  மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது ஜனாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்த பூதலூர் காவல்துறையினர் ஜனாவின் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story