ஆற்றில் இழுத்து செல்லப்பட்டு கல்லூரி மாணவர் பலி

X
திருச்சி மாவட்டம் செம்பரை பகுதியை சேர்ந்த ஆரியன் மகன் சரண் (20), தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஞாயிறு மதியம் தனது நண்பர்கள் ஆறு பேருடன், தஞ்சாவூர் மாவட்டம், ஆஆ. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, ஆற்றில் குளித்துக்கொண்டு சக நண்பர் ஒருவர் நீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டு இருந்தார். உடனே சரண் அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது, தண்ணீரில் சரண் இழுத்து செல்லப்பட்டார். அங்கு குளித்துக் கொண்டு இருந்தவர்கள் சரணின் நண்பரை மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, சரணையும் மீட்டு, திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரணை பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையினர், சரண் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
Next Story

