சிறுமியிடம் பாலியல் சீண்டல்: பள்ளிக் காவலாளி போக்ஸோவில் கைது

X
கோவில்பட்டியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பள்ளிக் காவலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த முத்தையா மகன் மாரியப்பன் (60). கோவில்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் காவலாளியாக உள்ள இவர், 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, மாரியப்பனை கைது செய்தனர்
Next Story

