காசிபாளையத்தில் டூவீலர் உடன் நின்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு.
காசிபாளையத்தில் டூவீலர் உடன் நின்றவர் மீது கார் மோதி விபத்து. ஒருவர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே காசிபாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் முத்தன் வயது 65. இவர் திங்கள்கிழமை மாலை 6:30 மணி அளவில் தாராபுரம் - கரூர் சாலையில் காசிபாளையம் அருகே தனது டூவீலருடன் நின்று அவரது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் திருப்பூர் மாவட்டம் அணையம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணி வயது 45 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த முத்தனை மீட்டுகரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த முத்தன் மகன் செல்லக்கண்ணு வயது 40 என்பவர் அளித்த புகாரில் சின்ன தாராபுரம் காவல் துறையினர் விபத்து ஏற்படுத்திய பாலசுப்ரமணி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story






