திருக்காம்புலியூர்-டூவீலர் மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.

திருக்காம்புலியூர்-டூவீலர் மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம்.
திருக்காம்புலியூர்-டூவீலர் மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி படுகாயம். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்,ஓவியாம் பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவா சங்கர் வயது 26. இவரது மனைவி கிருஷ்ணவேணி வயது 20. இருவரும் ஞாயிற்று கிழமை மாலை 5:30 மணி அளவில் கோவை- கரூர் சாலையில் சென்றனர். இவர்களது வாகனம் திருக்காமலியூர் ரவுண்டானா அருகே வந்த போது, அதே சாலையில் பின்னால் வந்த கரூர் ஆண்டாங் கோவில் கிழக்கு வசந்தம் நகரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார் சிவசங்கர் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. டூவீலருடன் கீழே விழுந்ததில் கணவன் - மனைவி இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் குறித்து சிவசங்கர் அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய தமிழ்ச்செல்வன் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story