டெம்போ டிரைவர் மீது வாகன மோதி படுகாயம்

டெம்போ டிரைவர் மீது வாகன மோதி படுகாயம்
X
களியக்காவிளை
குமரி மாவட்டம் மீனச்சல் பகுதியை சேர்ந்தவர் சுரேந்திர குமார் (49). டெம்போ டிரைவர். நேற்று இரவு இவர் படந்தாலுமூடு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது களியக்காவிளையை நோக்கி சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகமாக அஜாக்கிரதையாக சுரேந்திர குமார் மீது மோதியது. இதில் அவரது பின் தலை, உடல் உட்பட பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் குமரி அரசு மருத்துவமனையில் மேல்சிகிட்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story