உசிலம்பட்டியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
தமிழக முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தின்தொடக்க பள்ளிகளில் காலை உணவு வழங்கும் நிகழ்ச்சியினை சென்னையில் இருந்து முதல்வர் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்த நிலையில் மதுரை உசிலம்பட்டி ஆர்.சி. சிறுமலர் துவக்கப்பள்ளியில் நகரச் செயலாளர் எஸ்.ஓ.ஆர். தங்கப்பாண்டியன், உசிலம்பட்டி நகர் மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி, நகராட்சி ஆணையர் இளவரசன் ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கினர். மாணவ மாணவிகளுக்கு காலை உணவு பொங்கல் மற்றும் சக்கரை பொங்கல் கேசரி சாப்பிட்டனர்.
Next Story



