சேலம் அருகே லாரி, மோட்டார் சைக்கிள் மோதி ஆபரேட்டர் பலி

X
நாமக்கல் மாவட்டம் மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் குழந்தையப்பன். இவருடைய மகன் ராஜ்குமார் (வயது 27). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலம் வந்தார். பின்னர் இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காரிப்பட்டி அருகே உள்ள மேம்பாலத்தில் சென்ற போது அந்த வழியாக சென்ற லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

