ராமநாதபுரம் விநாயகப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது

உப்பூரில் இராமயண காலத்தில் ராமபிரான் பூஜித்த விநாயகர் ஆலய ஆவணி மாத திருவிழாவில் விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் திருகல்யாணம்  நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள வரலாற்று சிறப்பு மிக்க புராண கால கோயிலான உப்பூர் வெயிலுகந்த வினாயகர் ஆலய திருகல்யான வைபவ திருவிழா கொடியேற்றம் கடந்த 18ம் தேதி துவங்கியது. ஒவ்வொரு நாளும் சந்தன காப்பு அலங்காரத்துடன் மற்றும் வெள்ளி காமதேனு, வெள்ளி மயில் வெள்ளி மூஞ்சூறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இக்கோவில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆலயமாகும் ராமாயண காலத்தில் ராமபிரான் சீதாபிராட்டியை தேடி இலங்கைக்கு செல்லும் போது இந்த உப்பூர் வெயிலுகந்த வினாயகரை பூஜித்து சென்றதால் போரில் வெற்றி பெற்று சீதாபிராட்டியை மீட்டதாகவும், சிறப்பு வாய்ந்தது. அதே போல் தினமும் மூலவரான வெயிலுகந்த விநாயகருக்கு தினமும் சூரிய பகவான் பூஜிக்கும் வகையில் மூலவர் மீது வெயில் படும் விதமாகவும், அமைந்துள்ள ஆலயம். இன்று மாலை விநாயகருக்கு சித்தி புத்தி தேவியருடன் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலை மாற்ற நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இது தமிழகத்திலேயே இங்கு மட்டும் தான் நடைபெறும் என்பதை குறிப்பிடத்தக்கது.
Next Story