மரத்தில் கார் மோதி முதியவர் பலி

மரத்தில் கார் மோதி முதியவர் பலி
X
தாராபுரம் கேகே நகர் பகுதியில் சேர்ந்த முதியவர் ஓட்டி வந்த கார் மரத்தில் மோதி பலியானார்
தாராபுரம் கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச் சாமி (வயது 70). நேற்று, இவர் வடபருத்தியூரில் இருந்து காரில், தாராபுரம் நோக்கி வந்தார். அப்போது இவரது கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி யது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பொன்னுச்சா மியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தாராபுரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச் சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story