பல்லடத்தில் சுபமுகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசல்

பல்லடத்தில் சுபமுகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசல்
X
பல்லடத்தில் சுபமுகூர்த்த நாளில் கடும் போக்குவரத்து நெரிசல் புறவழிச் சாலை திட்டத்தை விரைவில் அமுல்படுத்த கோரிக்கை
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி ஆகிய நெடுஞ்சாலைகள் இணைவதால், பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது. திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டும். இந்த நிலையில் நேற்று சுப முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை -திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அண்ணா நகர் முதல், பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை, ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் நெரி சலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பல்லடம் திக்குமுக்காடிப் போனது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அதனால் புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்
Next Story