குளிர்பானங்கள் ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து!

X
தூத்துக்குடியில் இருந்து குளிர்பானங்களை ஏற்றிக் கொண்டு சரக்கு வாகனம் சாத்தான்குளத்தை அடுத்த திசையன்விளையில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதற்காகச் சென்றது. சரக்கு வாகனத்தை தூத்துக்குடி கமலேஷ் (25) ஓட்டிச் சென்றார். அவருடன் சாயல்குடியைச் சேர்ந்த கற்பகராஜ் (20), நேதாஜி (19) ஆகியோர் உடன் சென்றனர். திசையன்விளைக்கு வந்த அந்த வாகனம் கடைகளுக்கு குளிர்பனங்களை இறக்கிவிட்டு, சாத்தான்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தஞ்சை நகரம் அருகே உள்ள வளைவில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வாகனத்தில் இருந்த குளிர்பானங்கள் சாலையில் சிதறின. டிரைவர் கமலேஷ் லேசான காயத்துடனும், அவருடன் வந்த இருவரும் காயமின்றியும் தப்பினர். தகவல் அறிந்ததும் சாத்தான்குளம் போலீசார் சென்று காயமடைந்த டிரைவரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story

