கோவில்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு

X
கோவில்பட்டி பகுதிகளில் நாளை (ஆக. 30) சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (ஆக. 30) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story

