கரூர் -ஆவணி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்.

கரூர் -ஆவணி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்.
கரூர் -ஆவணி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு ஸ்ரீ முருகனுக்கு சிறப்பு அபிஷேகம். தேய்பிறை சஷ்டி முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகனுக்கு நேற்று இரவு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேகப் பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் அழகன் முருகனுக்கு பட்டாடை உடுத்தி, சிறப்பு அலங்காரம் நடைபெற்று தொடர்ச்சியாக உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார். பின்னர் சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story