சங்கரன்கோவிலில் பரோட்டா மாஸ்டர் தூக்கு போட்டு தற்கொலை

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தின் பிற்பகுதியில் உள்ள வாகன காப்பகம் அருகில் துரையப்பன் என்ற பரோட்டா மாஸ்டர் ஒருவர் இன்று காலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பகுதி பொதுமக்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

